பதிவு செய்த நாள்
19 ஏப்2022
21:33
புதுடில்லி : இருசக்கர வாகனங்களுக்கான தேவை, கடந்த ஆண்டை போலவே, நடப்பு ஆண்டிலும் குறைவாக இருப்பதாக, தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான தேவை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் அதிகரித்து உள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்களுக்கான தேவை மட்டும், தொடர்ந்து குறைவாக உள்ளது.நாடு முழுக்க உள்ள வாகன முகவர்களில், கிட்டத்தட்ட 80 சதவீத முகவர்கள், எங்கள் சர்வேயின் போது, இருசக்கர வாகனங்களுக்கான தேவை, கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் குறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வீடுகளிலிருந்து பணிபுரிவது இன்னும் தொடர்வதால், ஸ்கூட்டர் விற்பனை குறைந்துள்ளது. பரவலான மழை இல்லாத காரணத்தால், கிராமப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் தேவை குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், 53 சதவீத முகவர்கள், பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான தேவை நடப்பு ஆண்டில் அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|