பதிவு செய்த நாள்
19 ஏப்2022
21:36
டி.வி.எஸ்., பங்குகள் விற்பனை
டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் 212 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, ‘ஜுவாலமுகி இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.ஜுவாலமுகி நிறுவனம், கிட்டத்தட்ட 32.63 லட்சம் பங்குகளை, சந்தையில் விற்பனை செய்துள்ளது. இருப்பினும், இந்த பங்குகளை வாங்கியது யார் என்பது தெரியவில்லை.
அலுவலக தேவை அதிகரிப்பு
பெரு நிறுவனங்களின் தேவை அதிகரிப்பு காரணமாக, இந்தியாவில் அலுவலக இடத்துக்கான சந்தை, நடப்பு ஆண்டில் 3 கோடி சதுர அடியாக அதிகரிக்கும் என, ‘டாடா ரியாலிட்டி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்புகள் குறைந்து, ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்ப துவங்கி விட்டதை அடுத்து, பெருநிறுவனங்களின் அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
‘ஹோண்டா’வின் மின்சார கார்
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஹோண்டா’, அதன் புகழ்பெற்ற ‘சிட்டி’ காரில், மின்சார மாடல் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் சிட்டி கார், அடுத்த மாதம் அறிமுகம் ஆகும் என்றும், ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேயிலை விலையில் சாதனை
ஜப்பானை சேர்ந்த ‘சாமிடோரி’ எனும் தேயிலை, 1 கிலோ, கிட்டத்தட்ட 11.62 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.ஜப்பானின் மிகப் பிரபலமான ‘கிரீன் டீ’ இதுவாகும். உலக பொருளாதார நிலை தடுமாற்றத்தை சந்தித்து வரும் நிலையிலும், தரமான தேனீருக்கான தேவை அப்படியே உள்ளது.
உணவகங்களில், ஒரு கோப்பை சாமிடோரி தேனீர் விலை, கிட்டத்தட்ட 2,300 ரூபாய் ஆகிறது.எல்.ஐ.சி., பங்கு வெளியீடுஎல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு எப்போது வருவது என்பது குறித்து, இந்த வார கூட்டத்தின்போது முடிவு செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கடந்த சில நாட்களாக சந்தை இழப்பை சந்தித்து வருவதை அடுத்து, எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை இன்னும் சற்று தள்ளி வைக்கலாம் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|