பதிவு செய்த நாள்
20 ஏப்2022
21:32
கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதிகிராமப்புற கூட்டுறவு வங்கிகள், அவை அமைந்துஉள்ள பகுதி மக்கள் அல்லது பங்குதாரர்களிடமிருந்து, விருப்ப பங்குகள் அல்லது, கடன் பத்திரங்கள் உள்ளிட்டவைகளின் வாயிலாக, நிதி திரட்டிக் கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.
மாநில கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் தங்களுக்கு தேவையான நிதியை, கடன் பத்திரங்கள், விருப்ப பங்குகள் வாயிலாக திரட்டலாம் என, அனுமதி வழங்கி உள்ளது.கடன் வழங்குவதில் கட்டுப்பாடுவங்கி சாரா நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கும்போது, அவை, அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து திட்டங்களுக்கான உரிய அனுமதியை பெற்றுள்ளதா என உறுதி செய்துகொள்ளுமாறு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.மேலும், நிறுவனத்தின் இயக்குனர்கள்,தலைவர், அவர்களின் உறவினர் என எவருக்கும், 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
நிதி நிறுவனங்களுக்கு கடிவாளம்பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், நிதி நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான விதிகளை அரசாங்கம் திருத்தி அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசிடம், நிதி நிறுவனம் என அறிவித்த பிறகே, ஒரு நிறுவனம், வைப்புத் தொகையை ஏற்க வேண்டும். மேலும்,உறுப்பினர்கள் எண்ணிக்கை, பங்கு மூலதனம் ஆகியவை குறித்தும் பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. ‘அது’க்கும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’தாம்பத்ய விஷயங்களுக்கு உதவும் வகையில், மும்பையைச் சேர்ந்த, புதிதாக திருமணமான ஒரு தம்பதி, ‘மைமியூஸ்’ எனும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கி உள்ளனர்.
இந்நிறுவனம், தாம்பத்ய உறவுக்கு உதவும் வகையிலான வாசனை மெழுகுவர்த்தி, மசாஜ் எண்ணெய், கார்டு கேம்ஸ், கண் முகமூடி என பல பொருட்கள் கொண்ட ஒரு ‘கிட்’டை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்கிறது.18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, அவர்கள் விரும்பும் இடத்தில், எந்த அசவுகரியமும் நேராத வகையில், பிராண்டு வாசகங்கள் எதுவும் பெரிதாக இல்லாத பேக்கேஜில், டெலிவரி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
விடைபெறும் ‘நிசான் டட்சன்’ஜப்பானைச் சேர்ந்த ‘நிசான்’ நிறுவனம், இந்தியாவில் அதன் ‘டட்சன்’ பிராண்டு கார்கள் உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஆலையில், ‘டட்சன் ரெடி கோ’ உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும்; இம்மாடல் காரின் விற்பனை தொடரும் என்றும் நிசான் அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|