வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ஐந்து நாட்களுக்கு பின் ஆறுதல் தந்த சந்தை ஐந்து நாட்களுக்கு பின் ஆறுதல் தந்த சந்தை ...
‘வால்வோ’ கார்கள் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2022
21:34

புதுடில்லி–‘வால்வோ கார்ஸ் இந்தியா’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.

ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, அதன் கார்களின் விலையை, மாடலை பொறுத்து, 1 லட்சம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.இருப்பினும், ஏப்ரல் 12 வரை முன்பதிவு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு பொருந்தாது என்றும்; அதற்கு பின் வாங்குபவர்களுக்கும், பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

கார்கள் தயாரிப்புக்கான உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வை அடுத்து, இந்த விலை உயர்வு நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்நிறுவனம் இதற்கு முன், நடப்பு ஆண்டின் துவக்கத்தில், கார்களின் விலையை உயர்த்தியது. இருப்பினும், சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகரிப்பு, உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு, உலகளவில் சப்ளையில் ஏற்பட்டிருக்கும் தடை ஆகியவை காரணமாக, மீண்டும் ஒரு முறை விலையேற்றத்தை அறிவிக்க வேண்டியதாகிவிட்டது என, வால்வோ தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)