பதிவு செய்த நாள்
20 ஏப்2022
21:34
புதுடில்லி–‘வால்வோ கார்ஸ் இந்தியா’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, அதன் கார்களின் விலையை, மாடலை பொறுத்து, 1 லட்சம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.இருப்பினும், ஏப்ரல் 12 வரை முன்பதிவு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு பொருந்தாது என்றும்; அதற்கு பின் வாங்குபவர்களுக்கும், பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
கார்கள் தயாரிப்புக்கான உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வை அடுத்து, இந்த விலை உயர்வு நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்நிறுவனம் இதற்கு முன், நடப்பு ஆண்டின் துவக்கத்தில், கார்களின் விலையை உயர்த்தியது. இருப்பினும், சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகரிப்பு, உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு, உலகளவில் சப்ளையில் ஏற்பட்டிருக்கும் தடை ஆகியவை காரணமாக, மீண்டும் ஒரு முறை விலையேற்றத்தை அறிவிக்க வேண்டியதாகிவிட்டது என, வால்வோ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|