பதிவு செய்த நாள்
22 ஏப்2022
01:31
புதுடில்லி--–‘பாரத் பெட்ரோலியம்’ நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், அரசு புதிய முயற்சியில் இறங்க உள்ளது.
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகள் அரசின் வசம் உள்ளன. இந்த பங்குகளை விற்பனை செய்ய இதுவரை பல முயற்சிகளை மேற்கொண்டும், அது எதுவும் சரியான பலனை அளிக்கவில்லை.எனவே, அதற்கான முயற்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த அரசு முன்வந்துள்ளது.
புவிசார் அரசியல் பிரச்னைகள், மாற்று எரிபொருளுக்கான வரவேற்பு அதிகரிப்பு, நிறுவனத்தை வாங்குவதற்கு அமைக்கப்படும் கூட்டமைப்புகள் ஆகிய விஷயங்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.குறிப்பாக, பசுமை மற்றும் புதிப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு உலகம் மாறி வருவது, இந்நிறுவன பங்குகளை விற்பதில் சவாலாக மாறி உள்ளது.
இதுவரை மூன்று நிறுவனங்கள் மட்டுமே, பாரத் பெட்ரோலிய பங்குகளை வாங்க முன்வந்துள்ளன. அவற்றில், அனில் அகர்வால் தலைமையிலான ‘வேதாந்தா’ குழுமமும் ஒன்று.இந்நிலையில், விற்பனைக்கான விதிமுறைகளை திருத்துவது உள்ளிட்ட பல மாற்றங்களை முன்வைக்க, அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|