பதிவு செய்த நாள்
22 ஏப்2022
01:34
‘டியாகோ’ கார் விற்பனைநுழைவு நிலை ‘ஹேட்ச்பேக்’ காரான ‘டியாகோ’வின் மொத்த விற்பனை, நான்கு லட்சத்தை தாண்டிவிட்டதாக, ‘டாடா மோட்டார்ஸ்’ அறிவித்துள்ளது.டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டியாகோ காரை, 2016ம் ஆண்டு அறிமுகம் செய்தது.அனில் அகர்வால் ‘அட்வைஸ்’அரசு, அதன் நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு பதிலாக, அந்நிறுவனங்களை ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களாக மாற்றி, கூடுதல் லாபம் பார்ப்பது, அதன் பங்குகளை விற்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாக, அதிக பணம் பெற முடியும் என, ‘வேதாந்தா’ குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். ‘டாடா ஸ்டீல்’ முடிவு ‘டாடா ஸ்டீல்’ நிறுவனம், உக்ரைன் மீதான போர் காரணமாக, ரஷ்யாவுடனான அதன் வணிகத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவில் எந்தவித செயல்பாடுகளும், ஊழியர்களும் இல்லை என்றும், அந்நாட்டுடனான வணிகத்தை நிறுத்திக் கொள்வதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சில்லரை விலை பணவீக்கம்வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில் முறையே, 6.09 மற்றும் 6.33 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது, இதற்கு முந்தைய பிப்ரவரி மாதத்தில் முறையே, 5.59 மற்றும் 5.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.‘கியா’வின் மின்சார வாகனம்தென் கொரியாவைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ‘கியா’ இந்தியாவில், மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதையடுத்து, அதன் பிரீமியம் மின்சார ‘செடான்’ வகை காரான ‘ஈ.வி.6’ காரை, அடுத்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.அதிக கட்டணம் வேண்டாம்அரசு, ‘5ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு, அதிக கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்த 5ஜி வசதியை விரைவாக வெளியிடுவதன் வாயிலாக அதிக நன்மைகளை அரசு பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|