பதிவு செய்த நாள்
22 ஏப்2022
01:36
புதுடில்லி,-–நடப்பு நிதியாண்டில், சேவைகள் துறையின் ஏற்றுமதி, கிட்டத்தட்ட 26.60 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்ப்பதாக, சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான எஸ்.இ.பி.சி., தெரிவித்து உள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இலக்கை நிர்ணயிப்பது சம்பந்தமாக, தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் நடத்திய கூட்டத்தில், எஸ்.இ.பி.சி., இவ்வாறு தெரிவித்து உள்ளது.
இது குறித்து, கவுன்சிலின் துணை இயக்குனர் ஜெனரல் அபய் சின்ஹா கூறியதாவது:நடப்பு நிதியாண்டுக்கான சேவைகள் துறை ஏற்றுமதி இலக்கு, 22.80 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 26.60 லட்சம் கோடி ரூபாயாக மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், சேவைகள் துறை ஏற்றுமதி, இதுவரை இல்லாத வகையில் 19 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.தற்போது பயணம் மற்றும் சுற்றுலா, விருந்தோம்பல், கல்வி, பொழுதுபோக்கு ஆகிய துறைகள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வளர்ச்சி பெற்று வருகின்றன.
இந்த துறைகள் தவிர, வேறு சில துறைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, சந்தை ஆராய்ச்சி, ஆலோசனை, பொறியியல், கட்டுமானம் ஆகிய துறைகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|