சேவைகள் துறை ஏற்றுமதி சேவைகள் துறை ஏற்றுமதி ...  கடன் வாங்கி பண்டிகை கொண்டாட்டம்: இந்தியாவில் அதிகரித்து வரும் போக்கு கடன் வாங்கி பண்டிகை கொண்டாட்டம்: இந்தியாவில் அதிகரித்து வரும் போக்கு ...
கேட்காமல் 'கிரெடிட் கார்டு' கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2022
01:41

மும்பை,-'கிரெடிட் கார்டு'களை வழங்கும் நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

வாடிக்கையாளர்களின் அனுமதியை பெறாமல், புதிய கார்டுகளை வழங்குவதோ அல்லது ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் கார்டை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதோ கூடாது என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர் அனுமதி இன்றி அவ்வாறு செயல்பட்டால், பில் தொகையை போல இருமடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதேபோல், கார்டு வழங்கிய நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பு முகவர்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் போது, மிரட்டல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்குதல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதல்களில், வாடிக்கையாளர்களால் கோரப்படாத நிலையில், புதிய கார்டுகள் வழங்குதல் அல்லது மேம்படுத்துதல் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் ஜூலை 1ம் தேதியிலிருந்து அமலாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மேலும், இது போன்று கோரப்படாமல் கார்டு வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது நிலுவையை வசூலிப்பதற்காக மிரட்டப்பட்டிருந்தாலோ, கார்டில் யார் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர், ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பாளரை அணுகலாம். அவர் குறைதீர்ப்பாளர் திட்டத்தின் விதிகளின்படி, கோரப்படாத கார்டை பெற்றவருக்கு, கார்டு வழங்குபவர் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)