கேட்காமல் 'கிரெடிட் கார்டு' கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை கேட்காமல் 'கிரெடிட் கார்டு' கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என ... ...  மீண்டும் சூடுபிடிக்கும் ஆபரணங்கள் ஏற்றுமதி மீண்டும் சூடுபிடிக்கும் ஆபரணங்கள் ஏற்றுமதி ...
கடன் வாங்கி பண்டிகை கொண்டாட்டம்: இந்தியாவில் அதிகரித்து வரும் போக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2022
23:59

மும்பை-பண்டிகைகளை கொண் டாட தனிநபர் கடன் வாங்கும் போக்கு, இந்தியா வில் அதிகரித்திருப்பது, ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.

உலகளவில் சிக்கனத்துக்கும், சேமிப்புக்கும் பெயர் பெற்ற இந்தியர்களின் மனநிலையில், அண்மைக்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுஉள்ளது.கடன் குறித்த தகவல்களை வழங்கி வரும், 'கிரிப் ஹை மார்க்' நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.இது குறித்து ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

இந்தியாவில் பண்டிகைகளை கொண்டாட, தனிநபர் கடன் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் வாங்கப்பட்ட கடன்களின் அளவு, முந்தைய மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய கடன் அளவை விட, இருமடங்கு அதிகரித்து உள்ளது.தனிநபர் கடன்கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் காலாண்டில் மட்டும், 1.47 லட்சம் கோடி ரூபாய் தனிநபர் கடனாக பெறப்பட்டுள்ளது.

இதுவே 2018ல் இதே காலாண்டில் கடன் அளவு 75 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மற்ற அடமான கடன்களை போல இல்லாமல், தனிநபர் கடன்களுக்கு வங்கிகள் அதிக வட்டி வசூலித்த போதிலும்; இத்தகைய கடனை வாங்கும் மனநிலை மக்களிடம் அதிகரித்து உள்ளது.அதுமட்டுமின்றி; வாங்கிய கடனை கட்டாமல் போய்விடுவதும், தனிநபர் கடன் பிரிவில் தான் அதிகம் உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில், தனியார் துறை நிறுவனங்களை விட, அரசுக்கு சொந்தமான வங்கிகள், அதிக எண்ணிக்கையிலான கடன்களை வழங்கி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இருப்பினும், கடன் தொகையை கொண்டு பார்க்கும்போது, பொதுத்துறை வங்கிகளை விட, தனியார் துறை வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அதிக அளவில் கடன் தொகையை வழங்கி உள்ளன.கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இரு சக்கர வாகனங்களுக்கான கடன் தேவை, சரிவை கண்டுஉள்ளது.

பிற வாகன கடனில், பெரிய அளவிலான மாற்றம் இன்றி தொடர்கிறது.40 சதவீதம்ஆனால், வீட்டுக் கடன் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் 1.93 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வீட்டுக் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

நுகர்பொருட்களுக்கான கடன் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மற்ற அடமான கடன்களை போல இல்லாமல், தனிநபர் கடன்களுக்கு வங்கிகள் அதிக வட்டி வசூலித்த போதிலும்; இத்தகைய கடனை வாங்கும் மனநிலை மக்களிடம் அதிகரித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)