பதிவு செய்த நாள்
23 ஏப்2022
00:04
புதுடில்லி–புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, ‘ஷா பாலிமர்ஸ்’ நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
உதய்பூரை சேர்ந்த இந்நிறுவனம், அதிக அடர்த்தி கொண்ட, ‘பாலிபுரொபைலீன் மற்றும் பாலிஎத்திலீன்’ பைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மேலும், சமையலுக்கான ‘அவன்’ சாதனத்துக்கு தேவைப்படும் ‘பாலிமர்’ அடிப்படையிலான பொருட்களையும் தயாரித்து வருகிறது.பங்கு வெளியீட்டின்போது, இந்நிறுவனம் 1.02 கோடி புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.
அதேசமயம், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் எந்த பங்கையும் விற்பனை செய்யப்போவதில்லை என்றும் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, விரிவாக்க நடவடிக்கைகளுக்கும், புதிய திட்டங்களுக்கான நடைமுறை மூலதன தேவைகளுக்கும், சிலவகை கடன்களை அடைக்கவும் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் வருவாய், 2020 – 21ம் நிதியாண்டில் 12.16 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 55.07 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|