பதிவு செய்த நாள்
26 ஏப்2022
21:08
புதுடில்லி: எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, மே 4ம் தேதி துவங்கி, 9 தேதி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: பங்கு வெளியீட்டின் வாயிலாக, எல்.ஐ.சி., 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து,ஒரு பங்கின் விலை 902_949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. வரும் மே 4ம் தேதி துவங்கும் பங்கு வெளியீடு, 9 தேதியுடன் முடிவடைய உள்ளது.மேலும், பங்குகள் வாங்குவதில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் வரையிலும்; சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 40 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கலாம் என தெரிகிறது.துவக்கத்தில், அரசிடம் உள்ள 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது அது 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.அனேகமாக, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து, பங்கு வெளியீடு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம். இவ்வாறு தெரிவிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|