பதிவு செய்த நாள்
26 ஏப்2022
21:11
பெங்களூரு : எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே, ஜூன் மாதத்திலேயே ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கும் என ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த வாரம் வரை நினைத்துக் கொண்டிருந்ததற்கு மாறாக, ரிசர்வ் வங்கி, முன்கூட்டியே ஜூன் மாதத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என தெரிகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் அதிக அழுத்தமே இதற்கு காரணமாகும்.
கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் கிட்டத்தட்ட 7 சதவீதத்தை நெருங்கி விட்டது. இது, ரிசர்வ் வங்கியில் இலக்கான 6 சதவீதத்தை அதிகமாகும்.ஏப்ரலில் இந்த பணவீக்கம், மேலும் அதிகரிக்ககூடும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலகளவில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால், பணவீக்கமும் உயரும். ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில், 46 பொருளாதார அறிஞர்களில் மூவர் தவிர மற்றவர்கள், ஜூனில் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதில் 42 நிபுணர்கள், 0.25 சதவீதம் அளவுக்கு வட்டி அதிகரிக்கலாம் என தெரிவித்துஉள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|