பதிவு செய்த நாள்
26 ஏப்2022
21:12
புதுடில்லி : நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய பயணியர் வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’, இந்த ஆண்டின் இறுதியில், அதன் மின்சார வாகனமான ‘ஐயோனி 5’ காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த மின்சார கார், நடப்பு ஆண்டு பிற்பகுதியில், பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹூண்டாய் நிறுவனம், மின்சார வாகன பிரிவில், 2028ம் ஆண்டுக்குள், 6 மாடல்களில் மின்சார கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும், இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.இதன் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக இவ்வாண்டு இறுதியில், ஐயோனிக் 5 கார் அறிமுகம் ஆக உள்ளது.விரைவில் அடுத்தடுத்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என, ஹூண்டாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|