பதிவு செய்த நாள்
28 ஏப்2022
01:39
புதுடில்லி,–முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ இந்தியாவில், 19 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் நிறுவனமாக உயர்ந்துள்ளது.கடந்த புதன் கிழமையன்று, மும்பை பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை 1.85 சதவீதம் அதிகரித்ததை தொடர்ந்து, இதன் சந்தை மதிப்பு 19.13 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
இதையடுத்து, இந்தியாவில் 19.13 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தொட்ட முதல் நிறுவனம் என்ற பெயரை தட்டிச் சென்றுள்ளது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில், 18 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டியது. தற்போது ஒரு மாதத்துக்குள்ளாகவே, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 13ல், இந்நிறுவனம், 17 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டியதும் குறிப்பிடத்தக்கது.நடப்பு ஆண்டில் மட்டும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை, 19 சதவீதம் உயர்ந்துள்ளது.போரினால் இதன் பெட்ரோலிய வணிக லாபம் அதிகரித்ததும், தொலைதொடர்பு வணிகம் பாதிக்கப்படாததும் இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|