பதிவு செய்த நாள்
28 ஏப்2022
01:42
புதுடில்லி–கடந்த ஜனவரியில், ‘ஏர் இந்தியா’வை கையகப்படுத்திய நிலையில், தற்போது அடுத்தகட்டமாக, ‘ஏர் இந்தியா, ஏர் ஆசியா இந்தியா, விஸ்டாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில், ‘டாடா சன்ஸ்’ இறங்கி உள்ளது.
இதன் ஒருபகுதியாக, ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்குவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம், சந்தைகள் போட்டி ஆணையமான சி.சி.ஐ.,யிடம் அனுமதி கோரி உள்ளது.ஏர் ஆசியா இந்தியா நிறுவனம், மலேசியாவை சேர்ந்த, ‘ஏர் ஆசியா’ குழுமத்தின் ஓர் அங்கமாகும்.
இருப்பினும், ஏர் இந்தியாவை கையகப்படுத்தி இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் வசம், ஏர் ஆசியா இந்தியாவின் 83.7 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில், ஏர் ஆசியா இந்தியாவின் அனைத்து பங்குகளையும் வாங்க, டாடா முயற்சி செய்கிறது.ஏற்கனவே ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் தன் வசம் இருக்கும் நிலையில்,
தற்போது ஏர் ஆசியா இந்தியாவையும் முழுமையாக தன்வசம் ஆக்கிக்கொள்ள விரும்புகிறது டாடா சன்ஸ்.இதையடுத்து, விஸ்டாரா நிறுவனத்துடன் சேர்த்து, நான்கு நிறுவனங்களும் ஒரே குடையின் கீழ் வந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|