பதிவு செய்த நாள்
28 ஏப்2022
01:48
பாதுகாப்பில் ‘கூகுள்’ தீவிரம் உலகின் மிகப் பெரிய இன்டர்நெட் நிறுவனமான ‘கூகுள்’, செயலிகளை உருவாக்குபவர்களிடம், என்ன காரணத்துக்காக பயனர்களின் தரவுகளை சேகரிக்கிறார்கள் என்ற தகவலை கேட்டுள்ளது. இது குறித்த உரிய பதிலை, ஜூலை 20ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இயக்குனர்கள் ராஜினாமாதண்ணீர் சுத்திகரிப்பு, வாக்யூம் கிளீனர் உள்ளிட்ட சாதனங்களை தயாரிக்கும், ‘யுரேகா போர்ப்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து, ஷாபூர்ஜி பலோன்ஜி மிஸ்ட்ரி மற்றும் ஆறு இயக்குனர்கள் ராஜினாமா செய்து உள்ளனர்.
இந்நிறுவனத்தை, ‘லுானோலக்ஸ்’ நிறுவனம் வாங்கியதை அடுத்து, இவர்கள் இந்த முடிவை எடுத்து உள்ளனர்.டெண்டரில் கலக்கிய ‘டாடா’ ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5,450 மின்சார பேருந்துகளுக்கான அரசு டெண்டரை பெற்றுள்ளது. வாகனங்களின் விலையை இந்நிறுவனம், 40 சதவீதம் அளவுக்கு குறைத்திருப்பதை அடுத்து, இதற்கு இந்த டெண்டர் கிடைத்துள்ளது. வாகன கடன் வசதி ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு எளிதாக வாகன கடன் வசதி கிடைப்பதற்காக, ‘இந்தியன் வங்கி’ உடன் கூட்டு சேர்ந்திருப்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுக்க இருக்கும் 5,700 இந்தியன் வங்கி கிளைகளில், வாகன கடன் வசதியை எளிதாக வாடிக்கையாளர்கள் பெற முடியும்.‘பியூச்சர் பேஷன்ஸ்’ மறுப்பு‘பியூச்சர்’ குழுமத்தை சேர்ந்த, ‘பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ்’ நிறுவனம், அதன் பேஷன் பிராண்டுகள் சிலவற்றை விற்பனை செய்து, 1,000 கோடி ரூபாய் திரட்ட உள்ளதாக வந்த தகவல்களை, அந்நிறுவனம் மறுத்துள்ளது.பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இருந்து, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ பின்வாங்கிய நிலையில், இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|