ஜெப்ரானிக்ஸின் முதல் பெண் விளம்பரத் தூதராக ஜான்வி கபூர் நியமனம்ஜெப்ரானிக்ஸின் முதல் பெண் விளம்பரத் தூதராக ஜான்வி கபூர் நியமனம் ...  களைகட்டும் ஊடக உலகம் குவியத் துவங்கிய முதலீடுகள் களைகட்டும் ஊடக உலகம் குவியத் துவங்கிய முதலீடுகள் ...
தங்கத்தின் தேவை 18 சதவீதம் சரிவு உலக தங்க கவுன்சில் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2022
23:50

புதுடில்லி–நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இந்தியாவின் தங்கத்தின் தேவை, 18 சதவீதம் குறைந்துள்ளதாக, ‘உலக தங்க கவுன்சில்’ தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், தங்கத்தின் தேவை 18 சதவீதம் சரிவை கண்டு, 135.5 டன் ஆக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டான 2021ல், முதல் மூன்று மாதங்களில், தங்கத்தின் தேவை 165.8 டன் ஆக இருந்தது.பண மதிப்பின் அடிப்படையில் சொல்வதாக இருந்தால், கடந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில், தேவை 69 ஆயிரத்து 720 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில், 61 ஆயிரத்து 550 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.இது குறித்து, கவுன்சிலின் பிராந்திய தலைமை செயல் அதிகாரி பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:தங்கத்தின் விலை, ஜனவரி முதல் அதிகரிக்க துவங்கியது. நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் தங்கத்தின் விலை 8 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. 10 கிராம் தங்கத்தின் விலை, வரியை சேர்க்காமல், 45 ஆயிரத்து 434 ரூபாயாக உயர்ந்தது.தங்கத்தின் தேவை மட்டுமின்றி, தங்க ஆபரணங்களுக்கான தேவையும், முதல் மூன்று மாதங்களில் சரிவைக் கண்டுள்ளது.ஆபரண தேவை 26 சதவீதம் சரிவைக் கண்டிருக்கிறது. மொத்தம் 94 டன் என்ற அளவில் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.கொரோனா காலத்தை தவிர்த்து பார்த்தால், கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு, முதல் காலாண்டில், 100 டன்னுக்கு குறைவாக விற்பனை ஆனது,


மூன்றே மூன்று முறை மட்டுமே.தங்கத்தின் விலை கடுமையாக அதிகரிக்கவும், நுகர்வோர் பலர், விலை குறைந்ததும் வாங்கிக் கொள்ளலாம் என கருதி, தங்கம் வாங்கும் திட்டத்தை தள்ளிவைத்து விட்டனர்.தங்கத்தில் முதலீடுநடப்பு ஆண்டில் ஒட்டுமொத்த தங்கத்தின் தேவை, 800 முதல் 850 டன் வரை இருக்கும் என கருதுகிறோம்.மதிப்பீட்டு காலத்தில், தங்கத்தின் மீதான முதலீடு, 13 சதவீதம் அதிகரித்து, 18 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.முதலீட்டை பொறுத்தவரை, பெரும்பாலும் தங்க கட்டிகள், நாணயங்களில் தான் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.ரிசர்வ் வங்கிரிசர்வ் வங்கியும், தங்கம் வாங்குவதை தொடர்கிறது.


நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், கிட்டத்தட்ட 8 டன் அளவுக்கு தங்கத்தை வாங்கி உள்ளது. கடந்த 2017லிருந்து தங்கம் வாங்க துவங்கி, அதிலிருந்து இப்போது வரை 200 டன் வரை வாங்கி உள்ளது, ரிசர்வ் வங்கி. நடப்பு ஆண்டில், உக்ரைன் மீதான போர் உள்ளிட்ட புவிசார் அரசியல் சூழல் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)