பதிவு செய்த நாள்
28 ஏப்2022
23:53
புதுடில்லி–நிறுவனம் துவங்கியதிலிருந்து இதுவரை, மொத்தம் 20 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக, ‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ தெரிவித்து உள்ளது.
நேற்று இந்த சாதனை மைல்கல்லை இந்நிறுவனம் எட்டியதாகவும் அறிவித்துள்ளது.டொயோட்டா கிர்லோஸ்கர், கடந்த 1999ம் ஆண்டு டிசம்பரில், இந்தியாவில் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, நிறுவனத்தின் விற்பனை பிரிவின் துணை தலைவர் அதுல் சூட் கூறியதாவது:கடந்த இருபது ஆண்டு களுக்கும் மேலாக டொயோட்டா, வலுவான அடித்தளத்தை, அதன் தரம், நம்பகத்தன்மை, நீடித்த உழைப்பு ஆகியவற்றை கொண்டு அமைத்துள்ளது.
இக்காலகட்டத்தில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலான பலவிதமான வாகனங்களை தயாரித்து வழங்கி வந்துள்ளோம்.அடுத்த கட்டமாக, நிறுவனம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சந்தைகளிலும் சிறப்பு கவனத்தை செலுத்த உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|