பதிவு செய்த நாள்
29 ஏப்2022
00:05
மதுரை-–-சி.ஐ.ஐ., சார்பில், தெற்காசியாவின் மிகப்பெரிய கட்டுமான உபகரண கண்காட்சி, ‘எக்ஸ்கான்’ பெங்களூரில் மே 17 முதல் 21 வரை நடக்கிறது.சி.ஐ.ஐ., மதுரை துணைத் தலைவர் தினேஷ் டேவிட்சன் கூறியதாவது:தனியார் ஒப்பந்ததாரர்கள், கட்டடம் கட்டுவோர், சாலை, உள்கட்டமைப்பு மேம்பாட்டாளர்கள், ஸ்மார்ட் சிட்டி, நகர்ப்புற திட்டமிடல், ராணுவம், எல்லை சாலைகள் அமைப்புகள் குறித்த சமீபத்திய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், அறிவு தளமாக பயன்படுத்தவும் கண்காட்சி உதவும்.
ஜெ.சி.பி., வால்வோ, கேட்டர் பில்லர், பி.இ.எம்.எல்., உள்ளிட்ட முன்னணி நிறுவனத்தினர் பங்கேற்பர். உலகளவில் 40,000 பார்வையாளர்கள் வருவர்.இவ்வாறு அவர் கூறினார்மதுரை சி.ஐ.ஐ., துணை இயக்குனர் பிராங்க்ளின், சிவில் இன்ஜினியர் சங்க தலைவர் சீனிவாசன், ‘பி டூ பி தொழில்துறை விற்பனை, கல்ப் ஆயில் லுாப்ரிகண்ட்ஸ் இந்தியா’ நிறுவன துணைத் தலைவர் சோமேஷ் சபானி, பி.ஏ.ஐ., தலைவர் கார்த்திக், சி.என்.ஐ., மண்டல இயக்குனர் கோபிசன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|