பதிவு செய்த நாள்
01 மே2022
02:46
புதுடில்லி–‘ஐநாக்ஸ் விண்டு’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ்’ ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரப்போவதில்லை என முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்காக அனுமதி கோரி, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், பங்கு வெளியீட்டுக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 740 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுஇருந்தது. இதற்காக, கடந்த பிப்ரவரி 7ம் தேதி அன்று, செபிக்கு விண்ணப்பித்திருந்தது. ஆனால், 28ம் தேதி அதை வாபஸ் பெறுவதாக தெரிவித்துவிட்டது.
பங்கு வெளியீட்டிலிருந்து பின்வாங்கியதற்கான காரணம் எதையும் இந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. நிறுவனத்தின் நிர்வாக குழு, பங்கு வெளியீட்டுக்கு வர வேண்டாம் என முடிவெடுத்ததை அடுத்து, அது குறித்த தகவல்கள் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிறுவனம், காற்றாலை திட்டங்களுக்கான சேவை மற்றும் பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, காற்றாலைக்கான டர்பைன் ஜெனரேட்டர் மற்றும் காற்றாலை உள்கட்டமைப்பு வசதி ஆகிய பிரிவில் செயலாற்றி வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|