பதிவு செய்த நாள்
02 மே2022
08:47
ஓய்வு கால திட்டமிடல் நீண்ட கால இலக்கு என்பதால், சம்பாதிக்கத் துவங்கும் இளம் வயதில் இருந்தே மேற்கொள்வது சிறந்தது. ஓய்வு காலத்திற்கு தேவையான தொகையை பெற சரியான முதலீட்டு வாய்ப்புகளையும் தேர்வு செய்ய வேண்டும்.
அந்த வகையில் தேசிய பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்., பொருத்தமான வாய்ப்புகளில் ஒன்றாக அமைகிறது. என்.பி.எஸ்., திட்டம் வரிச் சலுகை அம்சங்களையும் கொண்டிருப்பதால் வரி சேமிப்பு திட்டமிடலிலும் கைகொடுக்கிறது. வரி சேமிப்பு திட்டமிடலில் என்.பி.எஸ்., கொண்டிருக்கும் சாதகமான அம்சங்களை பார்க்கலாம்.
கூடுதல் பலன்: வழக்கமான வரிச்சலுகையுடன், என்.பி.எஸ்.,திட்டம் வருமான வரிச்சட்டம் 80 சிசிடி பிரிவின் கீழ், கூடுதலாக 50 ஆயிரம் சலுகைக்கு உரியது. இந்த வரிச்சலுகையை கூடுதல் முதலீடாக கருதலாம். நீண்ட கால அடிப்படையில் இந்த தொகை கணிசமான பலனை அளிக்கும். வரி சேமிப்பிலும் பலன் அளிக்கும்.முதிர்வு பலன்: என்.பி.எஸ்., திட்டத்தின் முதிர்வு காலத்தில், 60 சதவீத தொகையை விலக்கி கொள்ளலாம், இந்த தொகைக்கு வரிச்சலுகை பொருந்தும். எஞ்சிய 40 சதவீத தொகையை ஆண்டளிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், அதற்கு வரி கிடையாது.
மாதாந்திர பலனுக்கு மட்டுமே வரி உண்டு.குறைந்த செலவு: என்.பி.எஸ்., திட்டத்தின் கீழ் சமபங்கு முதலீடு விகிதத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, யூலிப் மற்றும் இ.எல்.எஸ்.எஸ்., போன்ற சமபங்கு திட்டங்களுக்கான கட்டணத்துடன் ஒப்பிட்டால், இந்த திட்டத்திற்கான கட்டணம் வெகு குறைவு. ஆணையத்தின் கண்காணிப்பும் பாதுகாப்பு அளிக்கிறது.வாய்ப்புகள் அதிகம்: என்.பி.எஸ்., திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றை நிர்வகிக்கும் மேலாளர்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
மேலும், உறுப்பினர்கள் தாங்களே ஒதுக்கீடு விகிதத்தை தேர்வு செய்யலாம் அல்லது தானியங்கி வாய்ப்பை நாடலாம். வயதிற்கேற்ப சமபங்கு அளவு நிர்வகிக்கப்படும்.‘லாக் இன்’ காலம்: இளம் வயதிலேயே ஓய்வு கால திட்டமிடல் பற்றி யோசிப்பது கடினம் என்றாலும், இதன் மூலம் கூட்டு வட்டியின் பலனை பெறலாம். மேலும் என்.பி.எஸ்., திட்டத்தின் ‘லாக் இன்’ காலமும் நீண்ட கால நோக்கில் சாதகமாக அமைகிறது. தாமதமாக முதலீடு செய்யும் போது போதுமான தொகையை அடைய முடியாது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|