பதிவு செய்த நாள்
03 மே2022
07:12
புதுடில்லி : கொரோனா பரவலை தொடர்ந்து, வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை மேற்கொள்வது அதிகரித்தது. இதனால், கூடுதல் இடத் தேவை காரணமாக, பெரிய வீடுகளுக்கான தேவையும் அதிகரிக்க துவங்கியது.
தற்போது சிறிய அளவிலான வீடுகளுக்கான தேவையும் அதிகரித்து உள்ளது. தொழில்நுட்ப அடிப்படையிலான சொத்து ஆலோசனை நிறுவனமான ‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நாட்டின் முக்கியமான 6 நகரங்களில், புதிய வீடுகளுக்கான சப்ளை 43 சதவீதம் அதிகரித்து உள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், மொத்தம் 80 ஆயிரம் வீடுகள் சந்தையில் சப்ளை செய்யப்பட்டு உள்ளன.இதற்கு முக்கிய காரணம், வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவது தான். நடப்பு ஆண்டு வீடுகளுக்கான சப்ளை மற்றும் விற்பனை, மிகவும் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.
புதிய வீடுகளுக்கான சப்ளையில், மும்பை முதலிடத்தில் உள்ளது. மொத்த புதிய வீடுகள் சப்ளையில் கிட்டத்தட்ட 35 சதவீதம் மும்பையை சேர்ந்ததாகும். கொரோனாவுக்கு பிறகு, அதிக இடத் தேவை காரணமாக, சற்று பெரிதான புதிய வீடுகள் விற்பனை அதிகரிக்க துவங்கிய நிலையில், தற்போது, சிறிய அளவிலான வீடுகள் விற்பனையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இவ்வாறு இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|