சிறிய அளவிலான வீடுகள் விற்பனை அதிகரிப்பு சிறிய அளவிலான வீடுகள் விற்பனை அதிகரிப்பு ...  வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.83 சதவீதமாக அதிகரிப்பு வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.83 சதவீதமாக அதிகரிப்பு ...
பணவீக்கத்தையும் மீறி ஏற்றம் கண்ட தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2022
07:13

புதுடில்லி : கடந்த எப்ரல் மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி, வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.

இம்மாதத்தில், பணவீக்கத்தையும் மீறி உற்பத்தி மற்றும் ஆர்டர்களில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.‘எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா’ நிறுவனம், ஏப்ரல் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தாண்டு ஏப்ரலில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 54.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, மார்ச்சில் 54.0 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.

மார்ச் மாதத்தில் ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்த நிலையில், ஏப்ரலில் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, சற்றே தொய்வாக இருந்த நிலை, விரைவாக மாற்றம் கண்டுள்ளது. இருப்பினும், வேலை வாய்ப்பை பொறுத்தவரை, ஏப்ரலில் மிதமான வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போர், பொருட்கள் விலை ஏற்றம், போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை காரணமாக, உள்ளீட்டு செலவு இம்மாதத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் விலையை, ஓராண்டில் இல்லாத வகையில் அதிகரித்து, நிலைமையை சமாளித்து உள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)