வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.83 சதவீதமாக அதிகரிப்பு வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.83 சதவீதமாக அதிகரிப்பு ...  தமிழக ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.9,724 கோடியாக உயர்வு தமிழக ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.9,724 கோடியாக உயர்வு ...
இன்று தங்கம் விற்பனை அதிகரிக்கும்: ஆபரணத் துறையினரின் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2022
07:15

மும்பை : இன்றைய அட்சய திருதியை பண்டிகையை ஒட்டி, தங்க ஆபரணங்கள் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு, நகை விற்பனையாளர்களிடம் எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பாதிப்புகள் காரணமாக, தங்க ஆபரணங்கள் விற்பனை சரிவை கண்டு வந்தது. தற்போது பொருளாதார செயல்பாடுகள் மீண்டும் அதிகரித்து வருவதை ஒட்டி, இம்முறை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில தரப்பினர், தங்கத்தின் விலை அண்மையில் அதிகரித்துள்ளதை அடுத்து, அது ஒரு தடையாக அமையக் கூடும் என்றும்தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, இத்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். அஷிஷ் பெத்தே, தலைவர், அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்நாட்டு கவுன்சில்:தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதை அடுத்து, இம்முறை முன்பதிவு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருவதால், தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிப்பு, மற்றும் மக்கள் மனநிலை ஆகியவை காரணமாக, இம்முறை, கடந்த 2019ம் ஆண்டு விற்பனையை விட, 5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.கடந்த ஆண்டு தீபாவளியிலிருந்து அதிகம் பேர் கடைகளுக்கு வருகின்றனர். மேலும், நடப்பு ஆண்டில் ‘குடி பட்வா’வின்போது விற்பனை அதிகரித்துள்ளது.இதனால் இன்று அட்சய திருதியை நாளிலும் அதிகம் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம்.

பி.ஆர். சோமசுந்தரம், பிராந்திய தலைமை செயல் அதிகாரி, உலக தங்க கவுன்சில்:கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து, தங்கத்தின் விலை, உள்நாட்டில் கடுமையாக அதிகரித்து உள்ளது. ஆனாலும், அதையும் மீறி, கொரோனா தடைகள் அகன்று வருவதை அடுத்து, நகை வாங்குவது குறித்த பொதுவான மக்கள் மனநிலை ஏற்றமடைந்துள்ளது.

மேலும், பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க, பண்டிகையின்போது தங்கத்தை வாங்கி இருப்பு வைக்க பலர் விரும்புவர். அதனால் இம்முறை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை, நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,841----------- ரூபாயாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)