பதிவு செய்த நாள்
03 மே2022
20:31
சென்னை:தமிழகத்தில், 2022 ஏப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய், 9,724 கோடியாக அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், இது 10 சதவீத வளர்ச்சி என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், மாதந்தோறும் ஜி.எஸ்.டி., வரி வருவாய், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி., வருவாயும் வளர்ச்சி அடைந்துஉள்ளது.இதன்படி, ஏப்ரல் மாதத்தில், ஜி.எஸ்.டி., ஆக 9,724 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
இது, 2021 ஏப்ரலில் 8,849 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டையும் ஒப்பிடுகையில், 2022 ஏப்ரலில் 10 சதவீதம், வரி வசூலில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், ஜி.எஸ்.டி., வரி வசூல், 21 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது. இதன்படி, வரி வருவாய் 169 கோடியிலிருந்து, 206 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|