தமிழக ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.9,724 கோடியாக உயர்வு தமிழக ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.9,724 கோடியாக உயர்வு ...  ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி  24 சதவீதம் அதிகரிப்பு ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு ...
நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக ரூ.5,627 கோடியை திரட்டியது எல்.ஐ.சி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2022
21:20

புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக, 5,627 கோடி ரூபாயை திரட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இன்று துவங்கி, 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில், இதற்கு முன்பாக, நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக 5,627 கோடி ரூபாயை எல்.ஐ.சி., திரட்டி உள்ளது.

புதிய பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக, நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வாங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். நிறுவன முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீடு, சில்லரை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும்.

நிறுவன முதலீட்டாளர்களுக்கு, ஒரு பங்கின் விலை 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 5.93 கோடி பங்குகள் விற்பனைக்கு விடப்பட்டன.இந்த 5.93 கோடி பங்குகளில், 71.12 சதவீத பங்குகள் அதாவது, கிட்டத்தட்ட 4.2 கோடி பங்குகள், உள்நாட்டை சேர்ந்த 15 மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின், 99 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.

மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தவிர, சில காப்பீட்டு நிறுவனங்கள், பென்ஷன் பண்டுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவையும் முதலீட்டை மேற்கொண்டு இருக்கின்றன.எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டின்போது, மத்திய அரசு, அதன் 3.5 சதவீத பங்குகளை விற்பதன் வாயிலாக, 21 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டின் போது, ஒரு பங்கின் விலை 902 – 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பங்கு வெளியீடு இன்று துவங்கி, 9ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிறுவன பங்குகள், மே 17ம் தேதியன்று, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இன்று துவங்கி, 9ம் தேதி வரை நடைபெற உள்ளது; பங்கின் விலை 902 – 949 ரூபாய்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)