பதிவு செய்த நாள்
03 மே2022
21:20
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக, 5,627 கோடி ரூபாயை திரட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இன்று துவங்கி, 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில், இதற்கு முன்பாக, நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக 5,627 கோடி ரூபாயை எல்.ஐ.சி., திரட்டி உள்ளது.
புதிய பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக, நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குகளை வாங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். நிறுவன முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீடு, சில்லரை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும்.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு, ஒரு பங்கின் விலை 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 5.93 கோடி பங்குகள் விற்பனைக்கு விடப்பட்டன.இந்த 5.93 கோடி பங்குகளில், 71.12 சதவீத பங்குகள் அதாவது, கிட்டத்தட்ட 4.2 கோடி பங்குகள், உள்நாட்டை சேர்ந்த 15 மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின், 99 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தவிர, சில காப்பீட்டு நிறுவனங்கள், பென்ஷன் பண்டுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவையும் முதலீட்டை மேற்கொண்டு இருக்கின்றன.எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டின்போது, மத்திய அரசு, அதன் 3.5 சதவீத பங்குகளை விற்பதன் வாயிலாக, 21 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் போது, ஒரு பங்கின் விலை 902 – 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பங்கு வெளியீடு இன்று துவங்கி, 9ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிறுவன பங்குகள், மே 17ம் தேதியன்று, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, இன்று துவங்கி, 9ம் தேதி வரை நடைபெற உள்ளது; பங்கின் விலை 902 – 949 ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|