பதிவு செய்த நாள்
03 மே2022
21:21
புதுடில்லி:புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்திருந்த 7 நிறுவனங்களுக்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனங்கள், செபியின் அனுமதிக்காக, கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து, நடப்பு ஆண்டு பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் விண்ணப்பித்திருந்தன. இதையடுத்து, இவ்விண்ணப்பங்களை பரிசீலித்து, கடந்த ஏப்ரல் 27 முதல், 30ம் தேதி வரையிலான காலத்தில், அனுமதியை வழங்கி இருப்பதாக செபி தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், இந்நிறுவனங்களும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிறுவனங்கள் எப்போது பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன என்பது குறித்த தகவல்கள் இனி வெளிவரும். எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டின் வெற்றி, இந்நிறுவனங்களின் பங்கு வெளியீட்டின் மீதும் பாசிட்டிவ் தாக்கத்தை, குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுத்தும் என்கின்றனர், நிபுணர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|