பதிவு செய்த நாள்
03 மே2022
21:25
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரலில் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 24.22 சதவீதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 2.94 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி இம்மாதத்தில் நடைபெற்றுள்ளது.பெட்ரோலியப் பொருட்கள், மின்னணு பொருட்கள், ரசாயனம் ஆகிய துறைகளில் ஏற்றுமதி அதிக அளவில் நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் 2.37 லட்சம் கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி நடைபெற்றிருந்தது.நடப்பு ஆண்டு ஏப்ரலில், பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 12.32 சதவீதம் அதிகரித்துள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை, கடந்த ஏப்ரலில் 26.55 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதன் மதிப்பு 4.49 லட்சம் கோடி ரூபாய். இதில் பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் இறக்குமதி மட்டும் கிட்டத்தட்ட 2.98 லட்சம் கோடி ரூபாய்.
இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஏப்ரலில் 1.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில் 1.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இவ்வாறு மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|