பதிவு செய்த நாள்
04 மே2022
21:37
புதுடில்லி:இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக, 2028 - 29 நிதியாண்டில் வளர்ச்சி அடையும் என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார பார்வை குறித்த பன்னாட்டு நிதியத்தின் தரவுகளின்படி, 2027-28 நிதியாண்டில், இந்தியா 4.92 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயரும் என்று தெரியவந்துள்ளது. இதன்படி, 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக, அதற்கு அடுத்த நிதியாண்டில் இந்தியா உருவெடுக்கும் என கருதப்படுகிறது.
பிரதமர் மோடி, 2025ல், இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாறவேண்டும் என இலக்கு வைத்துள்ளார். ஆனால், பன்னாட்டு நிதிய கணிப்புப்படி, இந்நிலையை எட்ட கூடுதலாக நான்கு ஆண்டுகள் ஆகும். நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்அனந்த நாகேஸ்வரன், இந்தியா 2026-27ல்,5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாறும் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டாலர் மதிப்பை பொறுத்தவரை, 2028 நிதியாண்டில், 94.4 ரூபாயாக இருக்கும் என்றும், பன்னாட்டு நிதியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|