பதிவு செய்த நாள்
04 மே2022
21:40
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடுநேற்று துவங்கி இருக்கும் நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள், வரும் சனிக்கிழமை அன்றும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு வெளியீடு, நேற்று துவங்கி, 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகள் வாங்க வசதியாக, சனிக்கிழமை அன்றும், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
பொதுவாக சனிக்கிழமைகளில் விண்ணப்பிக்க முடியாது.ஆனால், இது 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பெரிய பங்கு வெளியீடு என்பதாலும், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகம் பங்கேற்பர் என்பதாலும், இந்த சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.இந்த வாய்ப்பின் காரணமாக, வங்கிகளின் மீதான அழுத்தமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பங்கு வெளியீட்டில், சில்லரை முதலீட்டாளர்களுக்கு 35 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், 45 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.நேற்றைய பங்கு வெளியீட்டில் மட்டும் 58 சதவீதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|