பதிவு செய்த நாள்
04 மே2022
21:48
மும்பை:நேற்று ரிசர்வ் வங்கி திடீரென வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கவும், அது பங்கு வர்த்தகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் 6.27 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
எல்.ஐ.சி., நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நாளில், ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கும் முடிவை அறிவித்தது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 1,307 புள்ளிகளை இழந்தது. இது, கிட்டத்தட்ட 2.29 சதவீத இழப்பாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 392 புள்ளிகளை இழந்தது.இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் 6.27 லட்சம் கோடி ரூபாயை இழந்து உள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க மத்திய வங்கி அதன் பணக்கொள்கை முடிவை அறிவிக்க இருக்கிறது. அங்கும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், வட்டி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழல், இந்திய சந்தைகளிலும் பிரதிபலிக்க கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|