ஐ.பி.ஓ., வரும் நிறுவனங்கள் பங்கு விலை அறிவிப்பு ஐ.பி.ஓ., வரும் நிறுவனங்கள் பங்கு விலை அறிவிப்பு ...  வட்டியை உயர்த்தும் வங்கிகள் வட்டியை உயர்த்தும் வங்கிகள் ...
நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி 5 மாதங்களில் இல்லாத உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2022
21:15

புதுடில்லி : நாட்டின், சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில், இதற்கு முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது என, ‘எஸ்.பி., குளோபல் இந்தியா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, ஏப்ரல் மாதத்தில், கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது.


சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும் குறியீடு, 57.9 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இது, 53.9 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். புதிய ஆர்டர்கள் அதிகரித்ததன் காரணமாக, வணிக நம்பிக்கை உயர்ந்து, ஏப்ரலில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.


சேவைகள் துறையை பொறுத்தவரை, கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.உள்ளீட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பின் காரணமாக, நிறுவனங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.வேலை வாய்ப்பை பொறுத்தவரை, சேவைகள் துறையில், கடந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு, முதன் முறையாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)