பதிவு செய்த நாள்
05 மே2022
21:15
புதுடில்லி : நாட்டின், சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில், இதற்கு முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது என, ‘எஸ்.பி., குளோபல் இந்தியா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, ஏப்ரல் மாதத்தில், கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது.
சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும் குறியீடு, 57.9 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இது, 53.9 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். புதிய ஆர்டர்கள் அதிகரித்ததன் காரணமாக, வணிக நம்பிக்கை உயர்ந்து, ஏப்ரலில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
சேவைகள் துறையை பொறுத்தவரை, கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.உள்ளீட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பின் காரணமாக, நிறுவனங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.வேலை வாய்ப்பை பொறுத்தவரை, சேவைகள் துறையில், கடந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு, முதன் முறையாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|