நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி 5 மாதங்களில் இல்லாத உயர்வு நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி 5 மாதங்களில் இல்லாத உயர்வு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வட்டியை உயர்த்தும் வங்கிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2022
21:16

புதுடில்லி : ரிசர்வ் வங்கி, கடந்த 4ம் தேதியன்று வட்டியை உயர்த்தி அறிவித்ததை அடுத்து, அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வங்கிகள் தங்கள் வட்டிவிகித்தை உயர்த்தி அறிவிக்கத் துவங்கி உள்ளன.


கடந்த 4ம் தேதியன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 0.40 சதவீதம் அதிகரித்துள்ளதாக திடீரென அறிவித்தது.நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக, இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருக்கிறது.ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கவும், அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வங்கிகளும் வட்டியை உயர்த்த துவங்கி உள்ளன.


‘எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் பரோடா, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி’ என பல வங்கிகள் உடனடியாக வட்டி உயர்த்தி உள்ளன. இவற்றில் பல வங்கிகள், தங்களுடைய வட்டி உயர்வு, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இவ்வங்கிகளில் வாகன கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்கியுள்ள வாடிக்கையாளர்களின் மாதாந்திர தவணைக்கான தொகை அதிகரிக்கும்.


மேலும், இவ்வங்கிகளில் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, கூடுதல் வட்டி வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இன்னும் பல வங்கிகள் வட்டியை உயர்த்தும் முயற்சியில் இறங்கி உள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வங்கிகள் மனநிலைரிசர்வ் வங்கி, கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, இதற்கு முன் வட்டியை குறைத்து அறிவித்தபோது, பெரும்பாலான வங்கிகள், வட்டியை தாமாக குறைக்க முன்வரவில்லை. அரசும், ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்க கோரி பல முறை அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதற்கு மாறாக உடனடியாக வட்டி உயர்வை அறிவிக்க துவங்கி உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)