பதிவு செய்த நாள்
06 மே2022
19:43
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரரும் ஆன எலான் மஸ்க், விரைவில் டுவிட்டரை கையகப்படுத்த உள்ளார் .இந்நிலையில், இது குறித்து ‘மைக்ரோசாப்ட்’ துணை நிறுவனர் பில்கேட்சிடம் கேட்டபோது, அவர், ‘எலான் மஸ்க் டுவிட்டரை மோசமாக்கி விடுவார்’ என தெரிவித்து உள்ளார்.
சுதந்திரமான பேச்சு குறித்து பேசும் எலான் மஸ்க், கொரோனா தடுப்பூசி குறித்து பரவி வரும் தவறான தகவல்களை எவ்வாறு தடுப்பார் என, கூட்டம் ஒன்றில், பில்கேட்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அப்போது அவர் இத்தகைய பதிலை கூறிஉள்ளார்.
ஏற்கனவே, பில்கேட்சுக்கும், எலானுக்கும் இடையே உரசல்கள் இருப்பதாகவும்; அதன் தொடர்ச்சியாகவே பில்கேட்ஸ் இவ்வாறு விமர்சித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|