பதிவு செய்த நாள்
07 மே2022
19:43
ரிசர்வ் வங்கியின் இலக்கு
ரிசர்வ் வங்கி, அதன் அன்னிய செலாவணி இருப்பை, 600 பில்லியன் டாலருக்கு அதிகமாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 46.20 லட்சம் கோடி ரூபாயாகும்.ரிசர்வ் வங்கி, இதற்கு கீழாக இருப்பை வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும், தற்போதைய சூழலில், இந்தியாவின் பலத்தை காட்டுவதாக இருப்பு இருக்க வேண்டும் என்றும் கருதுவதாக கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களின் இழப்பு
ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ், பேங்க் ஆப் இங்கிலாந்து ஆகியவை இரண்டு நாட்களில் தொடர்ந்து வட்டி உயர்வை அறிவித்ததை அடுத்து, சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், கிட்டத்தட்ட 11.8 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன.
வட்டியை உயர்த்திய எச்.டி.எப்.சி.,
எச்.டி.எப்.சி., நிறுவனம், வீட்டுக் கடனுக்கான வட்டியை 0.30 சதவீதம் அதிகரித்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வு, நாளை முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.புதிதாக கடன் வாங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே வாங்கி இருப்பவர்கள் என,இருதரப்புக்கும் இந்த வட்டி உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகிந்திரா நிறுவனம் மறுப்பு
‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறுவனம், அதன் வாகன வணிகத்தை, மூன்றாக பிரிக்க இருப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளது.ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும், பங்குச் சந்தைகளுக்கும் இந்த செய்திக்கான மறுப்பை வழங்கி உள்ளது. வணிகத்தை மூன்றாக பிரிக்கும் எண்ணம் எதுவும் தற்போது நிறுவனத்திடம் இல்லை என அதில் தெரிவித்துள்ளது.
வருவாயில் ‘ரிலையன்ஸ்’ சாதனை
‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், கடந்த நிதியாண்டில் 102 பில்லியன் டாலர் அதாவது, 7.92 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியிருப்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில், ஓராண்டில், 100 பில்லியன் டாலர் வருவாயை அதாவது, 7.70 லட்சம் கோடி ரூபாயை எட்டிய முதல் நிறுவனமாகி உள்ளது ரிலையன்ஸ்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|