பதிவு செய்த நாள்
07 மே2022
19:45
புதுடில்லி:பொதுத்துறையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சேவைகள் நிறுவனமான, ‘பவன் ஹான்ஸ்’ ஜூன் மாத வாக்கில், ‘ஸ்டார் 9 மொபிலிட்டி’ நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு விடும் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது.
நஷ்டத்தில் இயங்கி வந்த பவன் ஹான்ஸ் நிறுவனத்தை, தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்தியில் அரசு இறங்கியது.இதையடுத்து, நடைபெற்ற ஏல நடவடிக்கையில், ஸ்டார் 9 மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்பு, 211.14 கோடி ரூபாயில், பவன் ஹான்ஸ் நிறுவனத்தை வாங்க முன்வந்தது.
இதற்கிடையே, ஸ்டார் 9 மொபிலிட்டி நிறுவனம், அரசின் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.ஆனால், அரசு தரப்பில், ஏலம் கேட்கும் நிறுவனத்தின் நிகர மதிப்பு 300 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்டு இருந்த நிலையில், ஸ்டார் 9 கூட்டமைப்பின் நிகர லாபம், 691 கோடியாக உள்ளது என விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டார் 9 மொபிலிட்டி கூட்டமைப்பில், இந்நிறுவனம் தவிர, ‘மகாராஜா ஏவியேஷன்’ மற்றும் ‘பிக் சார்ட்டர்’ ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்த மூன்று நிறுவனங்களுமே உள்நாட்டை சேர்ந்தவையாகும். ஏலத்தில், இக்கூட்டமைப்பு தேர்வாகி இருப்பதற்கான கடிதம் அடுத்த வாரம் வழங்கப்படும். அதன் பின் ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதியை பெற வேண்டும். நிறுவனத்தை முழுமையாக ஒப்படைக்கும் பணி, ஒன்றரை மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|