பதிவு செய்த நாள்
07 மே2022
19:51
மும்பை:‘டாடா’ குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், 98 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு ‘டியூப்ளக்ஸ்’ வீட்டை வாங்கி உள்ளார்.மும்பை, பெடர் சாலையில் உள்ள 28 மாடி கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தான், கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரன் வசித்து வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில், ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு, இந்த குடியிருப்புக்கு மாறி வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 11 மற்றும் 12 மாடிகளை இணைத்து, தற்போது வாங்கி இருக்கிறார்.
மொத்தம் 6 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த டியூப்ளக்ஸ் வீட்டின் விலை, 98 கோடி ரூபாய். இந்த வீட்டிற்கான பத்திரப்பதிவு நான்கு நாட்களுக்கு முன் நடந்ததாகவும், சந்திரசேகரன், அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் இந்த வீடு வாங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது, 2027 பிப்ரவரி வரை நியமிக்கப்பட்டதை அடுத்தே, இந்த வீட்டை வாங்கும் முடிவுக்கு அவர் வந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த நிதிஆண்டில், ஆண்டு சன்மானமாக 91 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.
சந்திரசேகரன், நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் பிறந்து, இன்று டாடா குழுமத்தின் தலைவர் எனும் அளவுக்கு வளர்ச்சியை கண்டு உள்ளார் என்பது, குறிப் பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|