பதிவு செய்த நாள்
07 மே2022
19:55
புதுடில்லி:கடனில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ‘பியூச்சர்’ குழுமம், தன்னிடம் உள்ள, ‘அமர் சித்ரா கதா காமிக்ஸ்’ நிறுவனத்தின் 18.6 சதவீத பங்குகளை, விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இப்பங்குகளை, பியூச்சர் குழுமம், கிட்டத்தட்ட 13.62 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.இப்பங்குகளை, ராமாநாயுடு டகுபதி மற்றும் ‘ஸ்பிரிட் மீடியா’வுக்கு விற்பனை செய்ய உள்ளது. பியூச்சர் குழுமத்தின் அங்கமான, ‘பியூச்சர் கன்ஸ்யூமர்’ நிறுவனம் வசம் இருந்து, இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
பியூச்சர் குழுமத்தை சேர்ந்த பல நிறுவனங்கள், தங்கள் வசம் இருக்கும் பிற நிறுவன முதலீடுகளை, விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளன.கடந்த வியாழனன்று, ‘பியூச்சர் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம், ‘பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ்’ கம்பெனியின் 25 சதவீத பங்குகளை, 1,266 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
பியூச்சர் குழுமத்தின் சில்லரை வணிகத்தை, ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ நிறுவனம், 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய்க்கு வாங்க முன்வந்த நிலையில், ‘அமேசான்’ இதை எதிர்த்து பல்வேறு வழக்குகளை தொடர்ந்தது.இதையடுத்து, ஒரு கட்டத்தில், ரிலையன்ஸ் ரீட்டெய்ல், பியூச்சர் சில்லரை வணிகத்தை வாங்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்து விட்டது.இதன் தொடர்ச்சியாக பியூச்சர் குழுமம் கடுமையான கடன் அழுத்தத்தை சந்தித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|