பதிவு செய்த நாள்
10 மே2022
06:06
மும்பை,–இந்த வாரத்தில் மட்டும், மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளன.
அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, ரிசர்வ் வங்கி வட்டி உயர்வை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்துள்ளது.இத்தகைய நிலையையும் மீறி, நடப்பு வாரத்தில், மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளன.‘புருடெண்டு கார்ப்பரேட் அட்வைஸரி சர்வீசஸ், டெல்லிவரி, வீனஸ் பைப்ஸ் அண்டு டியூப்ஸ்’ ஆகிய மூன்று நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.
புருடெண்டு கார்ப்பரேட் நிறுவனம், இன்று பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. பங்கின் விலை 595 – 630 ரூபாய். 539 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.டெல்லிவரி நிறுவனம், நாளை புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. ஒரு பங்கின் விலை 462 – 487 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 5,235 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதேபோல், வீனஸ் பைப்ஸ் நிறுவனமும், நாளை புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது. ஒரு பங்கின் விலை 310-- – 326 ரூபாய். இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 165 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு, முதலீட்டாளர்கள் கொடுத்த ஆதரவைப்போல, இந்த மூன்று நிறுவனங்களுக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|