பதிவு செய்த நாள்
10 மே2022
06:09
மும்பை,–இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்றும் சரிவையே கண்டன.
அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தொடர்ந்து வெளியே எடுத்து வருவது, மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ளது ஆகியவை காரணமாக, சந்தைகள் சரிவைக் கண்டன.மேலும், உலக பங்கு சந்தைகளில் விற்கும் போக்கு அதிகரித்துள்ளது,
‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன பங்குகள் விலை சரிந்தது ஆகியவையும், சந்தை இறக்கத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.நேற்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 0.67 சதவீதம் இறக்கம் கண்டது. வர்த்தகத்தின் இடையே 1.67 சதவீதம் அளவுக்கு இறக்கத்தை சந்தித்தது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி’யும் சரிவை சந்தித்தது.வரும் நாட்களிலும், உலக சந்தைகளின் போக்கு, மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது ஆகியவை இந்திய சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|