பதிவு செய்த நாள்
10 மே2022
06:10
புதுடில்லி–‘பிர்லா டயர்ஸ்’ நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கைக்கு, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயமான என்.சி.எல்.டி., உத்தரவிட்டுள்ளது.பிர்லா டயர்ஸ் மீது, ரசாயன நிறுவனமான எஸ்.ஆர்.எப்., நிறுவனம் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, தீர்ப்பாயம் திவால் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.தீர்ப்பாயத்தின் இரு உறுப்பினர் கொண்ட அமர்வானது, பிர்லா டயர்ஸ் நிர்வாக குழுவை இடைநீக்கம் செய்ததோடு, நிறுவன செயல்பாடுகளை தொடர, இடைக்காலமாக, ஷேக் அப்துல் சலாமை நியமித்துள்ளது. பிர்லா டயர்ஸ் 15.84 கோடி ரூபாயை வழங்காமல், நிலுவையில் வைத்திருப்பதாக கூறி எஸ்.ஆர்.எப்., நிறுவனம் இந்த வழக்கை தொடர்ந்தது.வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தொகை செலுத்தப்படவில்லை என்பதை ஆவணங்கள் வாயிலாக பரிசீலித்து ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது.மேலும், இக்குற்றச்சாட்டை, பிர்லா டயர்ஸ் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.இதையடுத்து, பிர்லா டயர்ஸ் நிறுவனத்தின் மீதான திவால் நடவடிக்கைக்கு, அனுமதி வழங்கியது சட்ட தீர்ப்பாயம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|