பதிவு செய்த நாள்
10 மே2022
12:34
ரூபாய் மதிப்பு சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நேற்று, மேலும் சரிவு கண்டு இதுவரை இல்லாத வகையில் 77.50 ரூபாயாக சரிந்துள்ளது.பிற நாடுகளில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது மற்றும், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை காரணமாக, இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
எம்.ஜி., மோட்டார் விற்பனை
‘எம்.ஜி., மோட்டார்’ நிறுவனம், இந்தியாவில், இதுவரை ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், இந்தியாவில் தன்னுடைய விற்பனையை துவங்கியது. இந்த மூன்று ஆண்டுகளில், மொத்தம் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.
எல்.ஐ.சி., பங்கு வெளியீடு
எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 2.94 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில், 1.98 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.மேலும், ஊழியர்கள் தரப்பில் 4.38 மடங்கும்; பாலிசிதாரர்கள் தரப்பில் 6.09 மடங்கும் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் எலான் முதலீடு
எலான் மஸ்க் இந்தியாவில் ‘டெஸ்லா’ மின்சார கார் தயாரிப்பில் இறங்கினால், அது இதுவரை அவர் செய்துள்ள முதலீடுகளிலேயே மிகச் சிறந்த முதலீடாக இருக்கும் என, ‘சீரம் இன்ஸ்ட்டிடியூட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனவாலா கூறியுள்ளார்.‘டுவிட்டருடன் முதலீட்டை நிறுத்தும் எண்ணம் இல்லாவிடில், இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; அது இதுவரை செய்த முதலீடுகளிலேயே அதிக பலனை தருவதாக இருக்கும்’ என, எலான் மஸ்க் குறித்து டுவீட் செய்துள்ளார் பூனவாலா.
அன்னிய முதலீட்டாளர் முடிவு
அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து, கிட்டத்தட்ட 6,400 கோடி ரூபாயை மே மாதத்தில் இதுவரை வெளியே எடுத்து உள்ளனர்.அமெரிக்காவின் பெடரல் வங்கி மற்றும் இந்தியாவின் ரிசர்வ் வங்கி ஆகியவை வட்டியை உயர்த்தியதை அடுத்து, முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|