பதிவு செய்த நாள்
10 மே2022
20:56
புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதற்கு முந்தைய 18 மாதங்களில் இல்லாத வகையில், 7.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம், 45 பொருளாதார அறிஞர்களிடம், சில்லரை விலை பணவீக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ஏப்ரலில், 18 மாதங்களில் இல்லாத வகையில் 7.5 சதவீதமாக அதிகரித்திருக்கும். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு, இந்த ஏப்ரலில் தான் பணவீக்கம் மிகவும் அதிகரித்திருக்கும்.
எரிபொருள் மற்றும் உணவு ஆகியவற்றின் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணங்களாகும்.மொத்தவிலை பணவீக்கம், ஏப்ரலில் 14.48 சதவீதமாக அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதை அடுத்து, ரிசர்வ் வங்கி, அடுத்த பணக் கொள்கை கூட்டத்தின் போது, வட்டியை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பணவீக்கத்தை பராமரிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பு 6 சதவீதம் ஆகும். ஆனால் தொடர்ந்து மூன்று மாதங்களாக பணவீக்கம், 6 சதவீதத்தை தாண்டியுள்ளது. நான்காவது மாதமாக ஏப்ரலிலும் தாண்டும் என எதிர்பார்க்கலாம்.கடந்த மார்ச்சில் பணவீக்கம் 6.95 சதவீதமாக இருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|