வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  நிதி நிலைமை குறித்த ஆய்வு  பாசிட்டிவ்  மனநிலையில் இந்தியர்கள் நிதி நிலைமை குறித்த ஆய்வு பாசிட்டிவ் மனநிலையில் இந்தியர்கள் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2022
21:11

ரூ.11 லட்சம் கோடி இழப்பு
இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து மூன்று வர்த்தக நாட்களாக சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள்,11 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.ஆசிய சந்தைகள் பலவும் பணவீக்க அதிகரிப்பு, வட்டி உயர்வு போன்ற காரணங்களால் சரிவைக் கண்டுள்ளன.

எஸ்.பி.ஐ., வட்டி அதிகரிப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இரண்டு கோடி ரூபாய் அல்லது, அதற்கும் மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக, இவ்வங்கி தெரிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
வீடுகள் தேவை அதிகரிக்கும்
பொருட்களின் விலை உயர்வு மற்றும் வட்டி அதிகரிப்பு ஆகியவற்றையும் மீறி, வீடுகளுக்கான தேவை நிலையாக இருப்பதாக, ‘கிரிசில்’ நிறுவன ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டில், முக்கியமான 6 நகரங்களில் வீடுகளின் விலை 6 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி

‘ஐநாக்ஸ் விண்டு’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ்’, புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு, அதன் நிர்வாக குழு அனுமதி வழங்கி உள்ளது.ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 900 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
பணி அமர்த்துதல் அதிகரிப்பு
கடந்த ஏப்ரலில், நபர்களை பணியில் அமர்த்துவது, முந்தைய ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும் போது, 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக, ‘மான்ஸ்டர் இந்தியா’ ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.குறிப்பாக வங்கி , நிதிச் சேவைகள், காப்பீடு ஆகியவற்றில் பணியமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)