பதிவு செய்த நாள்
10 மே2022
21:11
ரூ.11 லட்சம் கோடி இழப்பு
இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து மூன்று வர்த்தக நாட்களாக சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள்,11 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.ஆசிய சந்தைகள் பலவும் பணவீக்க அதிகரிப்பு, வட்டி உயர்வு போன்ற காரணங்களால் சரிவைக் கண்டுள்ளன.
எஸ்.பி.ஐ., வட்டி அதிகரிப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இரண்டு கோடி ரூபாய் அல்லது, அதற்கும் மேல் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக, இவ்வங்கி தெரிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
வீடுகள் தேவை அதிகரிக்கும்
பொருட்களின் விலை உயர்வு மற்றும் வட்டி அதிகரிப்பு ஆகியவற்றையும் மீறி, வீடுகளுக்கான தேவை நிலையாக இருப்பதாக, ‘கிரிசில்’ நிறுவன ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டில், முக்கியமான 6 நகரங்களில் வீடுகளின் விலை 6 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி
‘ஐநாக்ஸ் விண்டு’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி சர்வீசஸ்’, புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு, அதன் நிர்வாக குழு அனுமதி வழங்கி உள்ளது.ஐநாக்ஸ் கிரீன் எனர்ஜி நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 900 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.
பணி அமர்த்துதல் அதிகரிப்பு
கடந்த ஏப்ரலில், நபர்களை பணியில் அமர்த்துவது, முந்தைய ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும் போது, 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக, ‘மான்ஸ்டர் இந்தியா’ ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.குறிப்பாக வங்கி , நிதிச் சேவைகள், காப்பீடு ஆகியவற்றில் பணியமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|