பதிவு செய்த நாள்
11 மே2022
21:14
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் தேதியன்று துவங்குவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
இதையடுத்து, இந்நிறுவன பங்கின் விலை 836 – 878 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதாஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 472 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதன் பங்கு வெளியீடு, 18ல் துவங்கி, 20ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த பங்கு வெளியீட்டின்போது, 375 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 11.08 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுஉள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியால், கடனை திருப்பி அடைக்கவும், நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும், புதிய கடைகளை திறப்பதற்காகவும் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இந்நிறுவனம் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஆடம்பர வாட்சு பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது.இதற்கு, 17 நகரங்களில் 50 கடைகள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|