‘ஏர் இந்தியா’வுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி ‘ஏர் இந்தியா’வுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி ...  ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரிப்பு ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பேட்டரி தயாரிப்பில் இறங்கும் ‘டாடா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2022
21:08

புதுடில்லி:‘டாடா குழுமம்’ பேட்டரி தயாரிப்பில் ஈடுபடும் முயற்சியில் இறங்கி உள்ளது. மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அவற்றுக்கான பேட்டரியை தயாரிக்கும் நிறுவனத்தை துவங்க திட்டமிட்டுள்ளதாக, குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்து உள்ளார்.
டாடா குழுமம், எதிர்காலத்துக்கு ஏற்றவாறு பல மாறுதல்களை ஏற்படுத்தி வருவதாகவும்; அதன் தொடர்ச்சியாக, பேட்டரி தயாரிப்புக்காக தனியாக ஒரு நிறுவனத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.இருப்பினும், பேட்டரி நிறுவனம் குறித்து, மேலதிக தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
நெக்ஸான் இ.வி., டைகோர் இ.வி., போன்ற மின் வாகனங்களின் விற்பனை அதிகரித்ததை அடுத்து, இந்தியாவின் முன்னணி பயணியர் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உயர்ந்துள்ளது. அடுத்து, வர்த்தக வாகன பிரிவிலும், மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)