பதிவு செய்த நாள்
13 மே2022
20:07
புதுடில்லி:ஏப்ரலில், சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்திருப்பதை அடுத்து, ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில் மேலும் 1 சதவீதம் அளவுக்கு வட்டியை அதிகரிக்கும் என, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கடந்த ஏப்ரலில், சில்லரை விலை பணவீக்கம் 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், மேலும் 1 சதவீதம் வரை ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கலாம்.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இது, ரிசர்வ் வங்கியின் இலக்கான 6 சதவீதத்தை விட அதிகமாகும்.ரிசர்வ் வங்கி, கடந்த வாரம் வட்டியை 0.40 சதவீதம் உயர்த்தி உள்ளது. தற்போது பணவீக்கம் அதிகரித்திருப்பதை அடுத்து, மேலும் 0.75 சதவீதத்திலிருந்து 1 சதவீதம் வரை வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கலாம். மேலும், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்திலும் 0.50 சதவீதம் உயர்த்தப்படலாம்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|