‘ஏர் இந்தியா’வுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி ‘ஏர் இந்தியா’வுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி ...  உலகின் பெரிய நிறுவனங்கள் 53வது இடத்தில் ‘ரிலையன்ஸ்’ உலகின் பெரிய நிறுவனங்கள் 53வது இடத்தில் ‘ரிலையன்ஸ்’ ...
ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2022
20:09

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரித்து, 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே சமயம், வர்த்தக பற்றாக்குறை 1.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரலில் 30.7 சதவீதம் அதிகரித்து, 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள், மின்னணு சாதனங்கள், ரசாயனம் ஆகிய துறைகளில் அதிக அளவில் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்த உயர்வு எட்டப்பட்டு உள்ளது.
இறக்குமதியை பொறுத்தவரை, 30.97 சதவீதம் அதிகரித்து, 4.64 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை 1.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரலில், வர்த்தக பற்றாக்குறை 1.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டில், இதுவரை இல்லாத வகையில் ஏற்றுமதி அதிகரித்து, புதிய சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டிலும் சாதனை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தங்கம் இறக்குமதி, ஏப்ரலில் 72 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரலில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)