பதிவு செய்த நாள்
13 மே2022
20:11
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவன பங்குகளுக்கான வெளியீட்டு விலையை, 949 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்து அறிவித்துள்ளது.
இம்மாதம் 17ம் தேதி, பங்குச் சந்தைகளில் எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் பட்டியலிடப்படுவதை முன்னிட்டு, ஒரு பங்கின் விலை 949 ரூபாய் என அரசு அறிவித்துள்ளது.இருப்பினும், எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கு 889 மற்றும் 904 ரூபாய் என தள்ளுபடி விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, கடந்த 4ம் தேதி துவங்கி, 9ம் தேதியன்று முடிவடைந்தது. அப்போது ஒரு பங்கின் விலை 902 – 949 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது, அதிகபட்ச விலையான 949 ரூபாயை வெளியீட்டு விலையாக அறிவித்துள்ளது அரசு. இதன் வாயிலாக, அரசுக்கு 20 ஆயிரத்து 557 கோடி ரூபாய் கிடைக்கும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|