பதிவு செய்த நாள்
13 மே2022
20:30
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து உள்ளதாக, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரியில் 116.6 கோடியாக இருந்தது; மார்ச்சில் 116.7 கோடியாக அதிகரித்து உள்ளது. மொபைல் போன் பிரிவில், மார்ச் மாதத்தில், ‘பார்தி ஏர்டெல்’ 22.55 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ‘ரிலையன்ஸ் ஜியோ’ 12.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.ஆனால், ‘வோடபோன் ஐடியா’ மார்ச்சில் 28.18 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பி.எஸ்.என்.எல்., 1.27 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.இவ்வாறு ‘டிராய்’ தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|